இல்லம் தேடி கல்வித் திட்டம்

கண்ணோட்டம்

இரண்டு வருட கோவிட்-19 காரணமாக, நாடு முழுவதும் நிறுவனங்கள் செயல்படா காலத்தில் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டதன் விளைவாக ஏற்படும் கல்வி பின்னடைவைத் தணிக்க பள்ளிக்கல்வித் துறையால் இல்லம் தேடி கல்வி (வாசலில்கல்வி) திட்டம் துவக்கப்பட்டது.

செப்டம்பர் 2022 இல் நடத்தப்பட்ட விரிவான கணக் கெடுப்பின் மூலமாக, திட்டத்தின் தாக்கத்தை விரைவாக மதிப்பீடு செய்தல் மாநில திட்டக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீட்டு ஆய்வில், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 362 பள்ளிகளில் தன்னார்வத் தொண்டர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வின் மூலம் தெரியவரும் முக்கிய தெளிவுகள்

1. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் அனுபவங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாகவும் மேலும், கல்வி கற்றல் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செயலாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

2. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட, விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறை, குழந்தைகளின் கற்றல் ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தினர். இதன்விளைவாக, மாணவர்கள் மிகவும் சுதந்திரமாக உரையாடல்களை மேற்கொள்கின்றனர் மற்றும் வழக்கமான வகுப்புகளில் தீவிரமாக பங்கேற்கிறார்கள்.

3. மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குள் கணிதத்தில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர் மற்றும் மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர்.

4. தன்னார்வலர்களும் ஆசிரியர்களும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடர்ச்சிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினர், இதுமாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ,அதன் உணரப்பட்ட மதிப்பையும் தாக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

செயல்பாடு தொகுப்பு